பொள்ளாச்சியில் தபால் குறைகேட்பு கூட்டம் செப்டம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

பொள்ளாச்சியில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவிருந்த தபால் குறைகேட்பு கூட்டம், பொதுவிடுமுறை காரணமாக செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தபால் கோட்டக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் தபால்துறை சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவும் அவ்வப்போது நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கோட்ட அளவில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொதுவிடுமுறை காரணமாக இந்தக் கூட்டம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் செப்டம்பர் 13 அன்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை எடுத்துரைக்கலாம். மேலும், தபால் சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...