கோவையில் உரிமம் இல்லாமல் கிராவல் மண் கடத்திய நபர் கைது: டிப்பர் லாரி மற்றும் மண் பறிமுதல்

கோவையில் துடியலூர் - பன்னிமடை சாலையில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். வருவாய் துறை அதிகாரிகள் டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் கிராவல் மண்ணை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் செப்டம்பர் 13 ஆம் தேதி, உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த லாரியை வருவாய் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, கடத்தப்பட்ட கிராவல் மண்ணை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை கலெக்டர் அலுவலக சிறப்பு வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் துடியலூர் - பன்னிமடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழனிகவுண்டன் புதூர் அருகே வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விஜயகுமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும் விதமாக காவல்துறையினர் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் கிராவல் மண்ணை பறிமுதல் செய்தனர்.

கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த சாலமோன் ராஜ் (36) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி மணல் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...