வால்பாறை பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பலத்தமழையால் மண் சரிவு- போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் சுமாரான அளவு மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையில் அடிக்கடி மின்வெட்டு, தொலைபேசி சேவைகளும் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் மண்ணும் கல்லும் விழுந்து கிடப்பதினால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



இதனால் அவ்வழியாக பன்னிமேடு, மளுக்கப்பாறை, புதுக்காடு, சோலையார் அணை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், ஆம்புலன்சும் தற்போது செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, அரசு இதுவரை சாலையை சீரமைக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விரைவில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமவெளிப்பகுதியில் கோடை வெய்யில் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் தினம் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், வால்பாறை பகுதி குளிர்சியாக இருபதினாலும், தேயிலைத்தோட்டங்கள் பசுமையாக காட்சியளிப்பதாலும், சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு சில வாரங்களாக அதிகமாக வரத்துவங்கியுள்ளனர்.

கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுணை, சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி, நீரார் அணை, சோலையார் அணை, சக்தி தலனார் காட்சி முணை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாபயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...