வால்பாறை பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பலத்தமழையால் மண் சரிவு- போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் சுமாரான அளவு மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையில் அடிக்கடி மின்வெட்டு, தொலைபேசி சேவைகளும் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் மண்ணும் கல்லும் விழுந்து கிடப்பதினால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



இதனால் அவ்வழியாக பன்னிமேடு, மளுக்கப்பாறை, புதுக்காடு, சோலையார் அணை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், ஆம்புலன்சும் தற்போது செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, அரசு இதுவரை சாலையை சீரமைக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விரைவில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமவெளிப்பகுதியில் கோடை வெய்யில் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் தினம் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், வால்பாறை பகுதி குளிர்சியாக இருபதினாலும், தேயிலைத்தோட்டங்கள் பசுமையாக காட்சியளிப்பதாலும், சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு சில வாரங்களாக அதிகமாக வரத்துவங்கியுள்ளனர்.

கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுணை, சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி, நீரார் அணை, சோலையார் அணை, சக்தி தலனார் காட்சி முணை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாபயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...