கோவை அவினாசி சாலையில் அண்ணாவின் 116வது பிறந்தநாள்: அதிமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கழக தலைமை நிலைய செயலாளரும், கழக கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அவருடன் தேமுதிக பிரதிநிதி விஜய்பிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே. அர்ஜுனன், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.



இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான செம்மலை வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி ஆகியோருடன், பார்த்திபன், சிங்கை பாலன், பொன்னுச்சாமி போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், சார்பு அணி செயலாளர்களான ஆர். பிரபாகரன், லாலிரோடு ராதா, புரட்சித்தம்பி, ஏ. மணிகண்டன், கே.கே. சக்திவேல், ஹமீது, எஸ்.ஆர். ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.

பகுதி கழக செயலாளர்களான சாரமேடு சந்திரசேகர், சிவக்குமார், சுபம் மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கனகராஜ், நடராஜ், எம்.ஜி.ஜே. ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், இலக்கடை ஜெயபால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதோடு, வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...