சின்னியம்பாளையம் தங்கும் விடுதியில் காதலி கொலை: காதலன் கைது

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் காதலி கொலை செய்யப்பட்டார். காதலன் சரவணன் கைது செய்யப்பட்டார். இருவரும் அண்ணன் தங்கை உறவுமுறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.


Coimbatore: கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னியம்பாளையத்தில் உள்ள விடுதிக்கு செப்டம்பர் 13 அன்று ஒரு பெண்ணுடன் இளைஞரும் வந்து தங்கினர். மறுநாள் அதிகாலை இளைஞர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறியதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அறையை சோதனையிட்டபோது, இளம்பெண் முகத்தில் காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டனர்.

உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ஆர்.ஜி. புதூரைச் சேர்ந்த சரவணன் என்பதும், இறந்து கிடந்த பெண் கள்ளபாளையத்தைச் சேர்ந்த கீதா என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். ஆனால், இவர்கள் அண்ணன் தங்கை உறவுமுறையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இருவரும் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இம்முறை தங்கியிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் குத்தி தலையில் அடித்ததில் கீதா இறந்துள்ளார். சரவணனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...