கொடநாட்டில் நடந்த கொலை பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்த கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷாவின் கோவை வருகை கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அமித்ஷா வருகையின் போது சென்னையில் பிரத்யேக செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மீது பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அதிமுக-வின் நிர்வாகிகள் எந்த புகாரும் தெரிவிக்காத போது எதிர்க்கட்சிகள் மட்டுமே பாஜக மீது புகார் தெரிவித்து விருகின்றனர். பாஜக மீது நாஞ்சில் சம்பத் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் உண்மையில்லாதது.

அதிகார மையத்தின் தலைமையிடமாக இருந்த கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்தக் கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்துகள், நிலைப்பாடுகள் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து விரிவாக்கம் அளிக்க வேண்டியது அவர்தான். அமித்ஷா வரும் போது டாக்டர். கிருஷ்ணசாமி பாஜக-வுடன்  இணைவாரா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

தமிழக அரசியல் சூழல் பாஜக-விற்கு சாதகமாகவே இருந்து வருகின்றது. சமூக நீதி பேசும் தலைவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான புதிய ஆணையம் தொடர்பான சட்டமசோதாவிற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியை புகுந்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை" இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...