கோவை - அபுதாபி விமான சேவை: குளிர்கால அட்டவணையில் இடம்பெறாததால் தொடர்வதில் சிக்கல்

கோவை - அபுதாபி இடையேயான இண்டிகோ விமான சேவை குளிர்கால அட்டவணையில் இடம்பெறவில்லை. ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என இண்டிகோ தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தொடங்கப்பட்ட நேரடி விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியது. பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்த சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. 186 பயணிகள் பயணிக்கக்கூடிய 'ஏர்பஸ் ஏ320' ரக விமானம் இந்த சேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் இருந்து அபுதாபி செல்லும்போது 93 சதவீத பயணிகளுடனும், அபுதாபியில் இருந்து கோவைக்கு வரும்போது 57 சதவீத பயணிகளுடனும் விமானம் இயக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச் கடைசி வாரம் வரை அமல்படுத்தப்படும் குளிர்கால அட்டவணையில் இந்த சேவை இடம்பெறவில்லை. இது விமான பயண ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதற்கும் விமான நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தனர்.

இந்த விமான சேவை தொடர்ந்து இயக்கப்படுமா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சேவையை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...