பள்ளேபாளையம் அருகே குட்டையில் இரண்டு முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் பள்ளேபாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒரு முதலை தென்பட்ட நிலையில், தற்போது அதே குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இது குறித்த தகவல் சிறுமுகை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு தினங்களாக வனத்துறையினர் முதலைகள் உள்ள குட்டையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முதலைகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைத்து, அவற்றை கண்காணித்தும் வருகின்றனர்.

விரைவில் அந்த குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...