மிலாது நபி விழா: 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் தீவிரம்

கோவையில் மிலாது நபி விழாவையொட்டி 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.



கோவை: கோவை மாநகரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இறைத்தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.



இதனையொட்டி, பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.





இந்த மாபெரும் உணவு தயாரிப்பிற்காக 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோவுக்கும் அதிகமான பிரியாணி அரிசி பயன்படுத்தப்படுகிறது.



மேலும், டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது.



250 பெரிய அளவிலான பாத்திரங்களில் 300-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உக்கடம், ஜி.எம் நகர், கோட்டைமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்க உள்ளனர். இதற்கு முன்னதாக, மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...