மிலாது நபி விழா: 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் தீவிரம்

கோவையில் மிலாது நபி விழாவையொட்டி 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.



கோவை: கோவை மாநகரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இறைத்தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.



இதனையொட்டி, பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.





இந்த மாபெரும் உணவு தயாரிப்பிற்காக 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோவுக்கும் அதிகமான பிரியாணி அரிசி பயன்படுத்தப்படுகிறது.



மேலும், டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது.



250 பெரிய அளவிலான பாத்திரங்களில் 300-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உக்கடம், ஜி.எம் நகர், கோட்டைமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்க உள்ளனர். இதற்கு முன்னதாக, மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...