கோவை தெற்கு தொகுதியில் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்தும் விளக்கினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். பிரதமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இந்த நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்," என்றார்.



"அம்மாவின் பெயரில் மரக்கன்று நடும் திட்டம், குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம், உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். சித்தாப்புதூர் பகுதியில் எச் ராஜாவுடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று நடும் திட்டத்தை செயல்படுத்தினோம்," என்று அவர் தெரிவித்தார்.

ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முப்பது பேர் வரை இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், "இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது," என்றார்.



தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், "ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பசுமை படை மாணவர் அமைப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளேன். எனது தொகுதியில் பெரும்பாலும் நாட்டு மரங்களையே குறுங்காடுகள் திட்டத்தில் நடுகிறோம். சிறுதுளி அமைப்பின் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். தெற்கு சட்டமன்ற தொகுதியின் பொது இடங்களில் எல்லாம் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம்," என்று தெரிவித்தார்.

மேலும், கோவை சுக்கிரவார் பேட்டையில் உள்ள விஸ்வேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவிலும் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து, அங்கிருந்த விஸ்வகர்மா சமூக மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...