கேரளாவில் நிபா வைரஸ்: கோவை எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, கோவை-கேரளா எல்லைப் பகுதிகளில் 13 சோதனை சாவடிகளில் 24 மணி நேர கண்காணிப்பு பணி தொடங்கியுள்ளது. வாகனங்கள் சோதனை, கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Coimbatore: கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக ஒரு வாலிபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழக-கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, கோவை-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி மீனாட்சிபுரம், கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதாரத் துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறியதாவது, "கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் சுகாதாரக் குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன."

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...