கோவை ஆர்.எஸ்.புரத்தில் போலி மருத்துவர் தம்பதி கைது: நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர். சிறுவனின் தாத்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம், ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 70) என்பவரின் 7 வயது பேரன் இக்சிட் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அஜய் நீரோ கிளினிக்கிற்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார்.

சிறுவனை பரிசோதித்த டாக்டர் பாலாஜி சக்கரவர்த்தி, அவரை முழுமையாக குணப்படுத்துவதாகக் கூறினார். இதை நம்பி ராமச்சந்திரன் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மருத்துவ கட்டணமாக செலுத்தினார். ஆனால், சிகிச்சைக்குப் பின் சிறுவனின் காலில் வலி ஏற்பட்டது.

பின்னர், அந்த மருத்துவமனை நிபுணர்கள், பூமார்க்கெட் சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனையை பரிந்துரைத்தனர். அங்கு சென்று சிகிச்சை எடுத்தபோது, சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ராமச்சந்திரன் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று புகார் அளித்தார். அதன் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் பாலாஜி சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை செப்டம்பர் 17 அன்று கைது செய்தனர்.

விசாரணையில், பாலாஜி சக்கரவர்த்தி பிசியோதெரபிஸ்ட்டாகவும், செல்வி நியூரோ தெரபிஸ்ட்டாகவும் இருந்து கொண்டு மருத்துவராக நடித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த போலி மருத்துவர் தம்பதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...