கோவையில் 2017ம் ஆண்டின் அரிமா சங்கத்தின் 8வது கூட்டு மாவட்ட மாநாடு

தமிழகத்தில் பணியாற்றி வருகின்ற அரிமா சங்கம் 324 கூட்டு மாவட்டம், 12 மாவட்டங்களைக் கொண்டு சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இந்த இயக்கத்தின் மிகப்பெரிய மாநாடாக 2017-ம் ஆண்டின் அரிமா சங்கம் சார்பில் 8-வது கூட்டு மாவட்ட மாநாடு வருகின்ற மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.



இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிமாக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பன்னாட்டு இயக்குநர் தொழிலதிபர் அரிமா ஜி.ராமசாமி அகில உலக அரிமா இயக்கத்தின் 3வது உதவி தலைவராக முன்மொழிவு செய்து தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு இயக்குநர்கள் அரிமா தனபாலன், அரிமா விஜயகுமார் ராஜு மற்றும் கெளரவ விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குநர் சங்கர், அரிமா ராமகிருஷ்ணமூர்த்தி, அரிமா நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில், எதிர்வரும் அரிமா ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்புகள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. மேலும் 2018- 2020ம் ஆண்டிற்கான பன்னாட்டு இயக்குநர் தேர்வுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. கூட்டு மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா பாலாஜி ரத்தினம் தலைமை வழிகாட்டுதலின் படி, மாநாட்டுத் தலைவர் அரிமா நௌரத்தன்மல் சாங்கலா மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...