கூடலூர் நகராட்சியில் DRO திடீர் ஆய்வு: காலை உணவுத் திட்டம், சுகாதார நிலையம் மற்றும் குடிநீர் வசதிகளை பரிசோதித்தார்

கூடலூர் நகராட்சியில் DRO டாக்டர் ஷர்மிளா திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், துணை சுகாதார நிலையம், குடிநீர் வசதிகள் மற்றும் பள்ளி கழிப்பிடங்களை பரிசோதித்தார்.


கோவை: கூடலூர் நகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) டாக்டர் ஷர்மிளா இன்று (செப்டம்பர் 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார். "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



DRO டாக்டர் ஷர்மிளா முதலில் கூடலூர் நகராட்சியின் தெற்கு பாளையத்தில் செயல்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவு கூடத்தை பார்வையிட்டார். அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்த DRO, குடிநீரின் தன்மை குறித்து விசாரித்தார். மேலும், அருகிலுள்ள தொடக்கப்பள்ளியின் கழிப்பிடங்களையும் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து கேள்விகள் எழுப்பினார்.



இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்களான முருகானந்தம், துரை செந்தில், மாடசாமி, பாலசுப்பிரமணியம், ஜனார்த்தனன், பேங்க் முருகேசன், எஸ் ஆர் பி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...