காந்திபுரம் மேம்பால பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

கோவை சத்தி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் காந்திபுரம் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காந்திபுரத்தில் இருந்து கணபதி மற்றும் சத்திசாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு 11-வது வீதி வழியாக சென்று 100 அடி சாலையை அடைந்து, அங்கிருந்து 2-வது வீதி, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக சத்தி சாலையை அடையலாம்.

சத்தி சாலையில் இருந்து காந்திபுரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் கணபதி மூர் மார்கெட் சந்திப்பில் ஆவாரம்பாளையம் சந்திப்பு வழியாக சென்று இராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு வழியாக செல்லலாம்.

மற்ற இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சத்தி சாலை ஆம்னி பேருந்து நிலையம் அருகில் வலதுபுறம் திரும்பி ராஜீ நாயுடு லே அவுட் வழியாக நூறு அடி சாலையை அடைந்து பின்னர் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...