காந்திபுரம் மேம்பால பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

கோவை சத்தி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் காந்திபுரம் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காந்திபுரத்தில் இருந்து கணபதி மற்றும் சத்திசாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு 11-வது வீதி வழியாக சென்று 100 அடி சாலையை அடைந்து, அங்கிருந்து 2-வது வீதி, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக சத்தி சாலையை அடையலாம்.

சத்தி சாலையில் இருந்து காந்திபுரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் கணபதி மூர் மார்கெட் சந்திப்பில் ஆவாரம்பாளையம் சந்திப்பு வழியாக சென்று இராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு வழியாக செல்லலாம்.

மற்ற இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சத்தி சாலை ஆம்னி பேருந்து நிலையம் அருகில் வலதுபுறம் திரும்பி ராஜீ நாயுடு லே அவுட் வழியாக நூறு அடி சாலையை அடைந்து பின்னர் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...