திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார். திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் என்று குற்றம்சாட்டினார்.


Coimbatore: கோவையில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார்.

"திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின் போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் குடும்பம் பிழைத்து கொண்டே இருக்கும்," என்று தமிழிசை குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா. திமுக-வின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின் போது உதயநிதியின் மகன் தலைமை என திமுகவில் தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். அதை கொண்டு கலைஞர் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்," என்றார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை விமர்சனம் செய்தார். "வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் என கம்யூனிஸ்ட்கள் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், கல்வித்துறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். இவை குறித்து கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை வரவேற்றதாகவும், இதனால் மக்களின் நேரமும் வரிப்பணமும் சேமிக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சேவை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...