பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: கணினி வழி பயிராய்வு பணியை திரும்ப பெற கோரிக்கை

பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண்மைத் துறையின் கணினி வழி பயிராய்வு பணியை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கூடுதல் பணி சுமை அவர்களின் பிற பணிகளை பாதிக்கும் என்று குறிப்பிட்டனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண்மைத் துறை செய்ய வேண்டிய கணினி வழி பயிராய்வு பணியை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதலாக வழங்குவதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை கணக்கெடுக்கும் வகையில் கணினி வழி பயிராய்வு பணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் செய்ய வேண்டிய பணியை கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்குவது பணிச்சுமையை அதிகரிப்பதோடு, மற்ற பணிகளை செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதனை எதிர்த்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். கூடுதலாக வழங்கப்படும் பணிகளுக்கு எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும், கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர்களின் இந்தக் கோரிக்கை குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...