நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கைது


மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கை கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதத்திலும், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதியை நசுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. மருத்துவப் படிப்புகளிலும், முதுநிலை மருத்துவ கல்வியிலும் சேருவதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் விதமாகவும் உள்ளது என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், மருத்துவ மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பலதரப்பட்ட பாடத்திட்டம் உள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் அமையும். நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கு நகர்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், சிறப்பு வகுப்பு மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை என குற்றச்சாட்டுகள் உள்ளன. 

எனவே, நகர்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் இணையாக போட்டியிட்டு மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வை எழுத முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த நீட் தேர்வினை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...