நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கைது


மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கை கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதத்திலும், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதியை நசுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. மருத்துவப் படிப்புகளிலும், முதுநிலை மருத்துவ கல்வியிலும் சேருவதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் விதமாகவும் உள்ளது என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், மருத்துவ மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பலதரப்பட்ட பாடத்திட்டம் உள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் அமையும். நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கு நகர்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், சிறப்பு வகுப்பு மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை என குற்றச்சாட்டுகள் உள்ளன. 

எனவே, நகர்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் இணையாக போட்டியிட்டு மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வை எழுத முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த நீட் தேர்வினை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...