கோவையில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அறிவித்துள்ளார். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati செப்டம்பர் 19 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

2024-25 கல்வியாண்டில் MBBS, BE, B.Tech, BDS, B.Sc, B.Ed, BBA, BCA, B.Pharma மற்றும் அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பிற தொழிற்சார்ந்த பட்டப் படிப்புகளில் பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மைய முப்படை வீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் இந்த பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 12-ஆம் வகுப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து, தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.

விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை குறிப்பிட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே இணையதள முகவரியில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் Kranthi Kumar Pati கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...