அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாழாதல் போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கனாங்கொம்பு பகுதியில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், கிராவல் மண் எடுப்பதால் தங்கள் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், எதிர்வரும் தலைமுறையினருக்கு நிலத்தடி நீர் பாழாகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அப்பகுதி மக்கள். மேலும், அதிக அளவில் லாரிகள் கிராம சாலைகள் வழியாக சென்று வருவதால் சாலை சேதம் அடைவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால், கிராவல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கிராவல் மண் எடுத்து வந்த லாரிகளை சிறைப்பிடித்து வாக்கனாங்கொம்பு ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்த தகவல் அறிந்து வந்த அக்கரை செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய அனுமதி உள்ளதா என ஒப்பந்ததாரரிடம் ஆவணங்களை சரிபார்த்தனர்.

கோவை கனிமவளத்துறை அதிகாரிகளின் அனுமதி கடிதம் பெற்று கிராவல் மண் அள்ளப்படும் நிலையில், பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் மண் எடுக்க அனுமதி கொடுக்க கூடாது என்றும், அதை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கிராவல் மண் எடுக்கும் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அதிகாரிகள் மண் எடுக்க வேண்டாம் என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தினர். புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...