கோவையில் போலி பத்திரிகையாளர்களை அடையாளம் காண வாட்ஸ்அப் எண் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

கோவையில் போலி பத்திரிகையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்களை அடையாளம் காண மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்று கூறி மக்களிடம் மனுக்கள் மற்றும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

அரசு அலுவலகங்கள் முன்பு போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 94980-42423 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பலாம். இந்த எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...