அக்னி வெயில் இன்று முதல் ஆரம்பம்- வரும் 28ம் தேதிவரை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

அக்னி வெயில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஏப்ரல் மாத மத்தியில் திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 100 டிகிரி என்ற அளவை எட்டியது. அதுவும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெயில் காலை 8 மணியில் இருந்தே கடுமையாக இருந்து வருவதால் குழந்தைகள், முதியோர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். குடைகள் இல்லாமல் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதுவும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றின் விற்பனையும் களை கட்டியுள்ளது. மேலும் குளிர் பானங்கள் விற்பனையும் அமோகமாக உள்ளது. இன்று தவங்கும் இந்த அக்னி என்னும் கத்திரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை இருக்கும். கத்திரி வெயில் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அனல் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...