திமுக பவள விழா: கோவை 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைய உள்ளனர்.



Coimbatore: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி துவக்கி வைத்தார்.

சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட விஸ்வாசபுரத்தில் 5-வது வார்டு திமுக, லயன்ஸ் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், முத்துஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தன. துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, சிறுபான்மை உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான், பகுதி கழக செயலாளர் பொன்னுசாமி, மாமன்ற உறுப்பினர் நவீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாம் குறித்து வார்டு செயலாளர் கண்ணன் கூறுகையில், "இந்த முகாமில் குழந்தைகள் பொதுநல பரிசோதனை, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, ஆறாத புண் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட புண்களுக்கு சிகிச்சை, கை, கால், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆலோசனை, இருதய மாரடைப்பு சிகிச்சைகளுக்கான ஆலோசனை, பித்தப்பை கல் மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது," என்றார்.

முகாம் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த வார்டுக்கு உட்பட்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாமில் பயனடைய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மருத்துவ முகாமில் துணை செயலாளர் வி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...