கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவையில் கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் பரிசுகள் வழங்கினார்.


Coimbatore: கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பாக 2023-2024-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மேலும் அதனை தொடர்ந்து இந்த விழாவில் வின்னர்'ஸ் இண்டியா நிறுவனர் C.K கண்ணன் நான்கு மாணவர்களுக்கு தலா இரண்டு சென்ட் நிலங்களை இலவசமாக வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை தலைவர் பாரி IPS, டாலர் குரூப் ராமமூர்த்தி, கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் தலைவர் ராஜ்குமார், துணை தலைவர் நந்தகுமார், இணைச் செயலாளர் லோகநாதன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் அழகேசன், இந்துஸ்தான் கல்விக் குழுமம் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...