தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: டாஸ்மாக் கடை சீல் வைப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை புகார் அடிப்படையில் காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. அதிகாரிகள் டாஸ்மாக் கடையை சீல் வைத்தனர். வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூரில் இருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் அதிகாலைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 22) காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் முழுவதையும் தகர தகடுகளைக் கொண்டு மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.



பேரூர் தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அவர், டாஸ்மாக் பார் கடையின் ஊழியர்கள் படுத்து உறங்க வைத்திருந்த இரண்டு வயர் கட்டில்களை எடுத்து ஒன்றிணைத்து, அதில் கம்பி கட்டி பூட்டி சீல் வைத்தார். இந்த வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டதை பார்த்த மது பிரியர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றனர்.

உயர் அதிகாரிகள் தகர தகடுகளை முழுவதுமாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், படுத்து உறங்கும் வயர் கட்டில் வைத்து மூடி சீல் வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வித்தியாசமான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடவடிக்கை சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...