கோவையில் வீட்டுவசதி வாரிய நிலுவைத் தொகை செலுத்த மே 30 வரை அவகாசம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 177 ஒதுக்கீட்டாளர்கள் நிலுவைத் தொகையை மே 30க்குள் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். தவறினால், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலுவைத் தொகை செலுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கோவை வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 177 ஒதுக்கீட்டாளர்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த வரும் மே 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி மற்றும் முதலிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மனைகளின் ஒதுக்கீட்டாளர்கள் இந்த அறிவிப்பின் கீழ் வருகின்றனர். வாரிய விதிமுறைகளின்படி பணம் செலுத்தும் காலம் முடிவுற்றும், அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் பலர் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒதுக்கீட்டாளர்கள் தங்களிடம் உள்ள அசல் விண்ணப்பம், ஒதுக்கீட்டு ஆணை, அசல் ரசீதுகள் மற்றும் அசல் ஆவணங்களுடன் கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி, கணக்கை நேர் செய்து நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் கிரயப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வழங்கிய எச்சரிக்கையின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்படும். எனவே, சம்பந்தப்பட்ட ஒதுக்கீட்டாளர்கள் இந்த அறிவிப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...