கோவை: ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை சாந்தி தியேட்டர் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இடையூறு செய்வதாக கூறி, அவர்களை அகற்றக் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.



Coimbatore: கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் ஓட்டுநர்கள், கடந்த சில நாட்களாக வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்தி வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், தொடர்ந்து வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோ நிறுத்தத்திலிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அங்கு கொடிக்கம்பமும் போர்டும் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் அசோக் குமார் கூறுகையில், "வெளியில் இருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களால் இங்கு பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...