கோவை: ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை சாந்தி தியேட்டர் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இடையூறு செய்வதாக கூறி, அவர்களை அகற்றக் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.



Coimbatore: கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் ஓட்டுநர்கள், கடந்த சில நாட்களாக வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்தி வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், தொடர்ந்து வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோ நிறுத்தத்திலிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அங்கு கொடிக்கம்பமும் போர்டும் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் அசோக் குமார் கூறுகையில், "வெளியில் இருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களால் இங்கு பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...