பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவம்: தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் 108 ஆம்புலன்ஸில் பெண் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித செயல்பாட்டால் தாயும் சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன் மனைவி காயத்திரிக்கு இன்று காலை வீட்டில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். காயத்திரியை ஆம்புலன்ஸில் ஏற்றி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்தது.

நிலைமையின் அவசரத்தை உணர்ந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அவரது சிகிச்சையின் பலனாக, சிறிது நேரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமயோசிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் தங்கவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...