கோவை பீளமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெயிண்டர் பலி

கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பேர் மீது மோதியது. விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் நேற்று (செப்டம்பர் 22) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற இரண்டு பேர் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து நடந்த உடனேயே அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் (50) என்பதும், படுகாயமடைந்தவர் திண்டுக்கல் அய்யன்குளம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜா (42) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து, பீளமேடு பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிய வந்தது.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் திருப்பூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (53) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...