கோவை பீளமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெயிண்டர் பலி

கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பேர் மீது மோதியது. விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் நேற்று (செப்டம்பர் 22) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற இரண்டு பேர் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து நடந்த உடனேயே அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் (50) என்பதும், படுகாயமடைந்தவர் திண்டுக்கல் அய்யன்குளம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜா (42) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து, பீளமேடு பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிய வந்தது.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் திருப்பூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (53) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...