தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 26 முதல் 29 வரை மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகியவை இடம்பெறுகின்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா நடைபெற உள்ளது. தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியோருடன் இணைந்து இவ்விழா நடத்தப்படுகிறது.

இவ்விழாவில், 250-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், நேரடி பண்ணை செயல் விளக்கங்கள், புதிய பயிர் இரகங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் மாதிரித் திடல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், தலைசிறந்த விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கூறுகையில், "காலநிலை மாற்றம், விலையேற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. இந்த சவால்களை சமாளிக்கும் வகையில், 'வேளாண்மையில் நவீன உத்திகள்' என்ற தலைப்பில் உழவர் தின விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இந்த விழாவில் புதிய பயிர் ரகங்கள், புதிய தொழில் நுட்பங்கள், மேம்பட்ட நீர்ப்பாசன முறைகள், வேளாண் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். சிறுகுறு விவசாயிகளுக்கு வங்கி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விளக்கங்கள், மற்றும் வேளாண் இயந்திரங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும்.

விழா நடைபெறும் நான்கு நாட்களும் பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞானிகள், வல்லுனர்கள், பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

இவ்விழாவை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைக்க உள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர், தொழில் முனைவோர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...