கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கோவை தொழிலதிபர் சஞ்சீவன் விளக்கம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிற்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அரசியல் முன்விரோதம் காரணமாக அதிமுகவை சேர்ந்த 3 பேர் தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க வதந்திகளை பரப்பியதாகவும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவன் விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவன் என்ற தொழிலதிபர், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் பர்னிச்சர் உள்ளிட்ட அனைத்து மரவேலைகளையும் செய்துள்ளார். இந்நிலையில், கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கிற்கும் சஞ்சீவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, சஞ்சீவன்-யிடம் போலீசார் விசாரணை நடத்தப்போவதாகவும், சஞ்சீவன் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது பர்னிச்சர் கடையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சீவன், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார்.

அரசியல் ரீதியாக தனக்குள்ள எதிரிகள் தன்னை இவ்வழக்கில் சிக்க வைக்க வதந்திகளை பரப்பிவிட்டதாக கூறிய அவர், அதிமுகவை சேர்ந்த கூடலூர் பகுதி நிர்வாகிகள் 2 பேர் மற்றும் ஊட்டியை சேர்ந்த ஒருவர் அரசியல் முன்விரோதம் காரணமாக இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்த போது தான் சார்ஜாவில் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக கோவையில் தான் தங்கியிருப்பதாகவும் கூறிய சஞ்சீவன், வெளிநாட்டிற்கு எங்கும் தப்பி செல்லவில்லை என தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரணை எதுவும் நடத்தவில்லை எனவும், இவ்வழக்கில் தொடர்புடைய கனகராஜை மட்டும் தனக்கு அறிமுகம் எனவும், வேறு யாரையும் பார்த்தது கூட கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...