அதிவேகமாக இயங்கியதாக அதிகாரிகள் பறிமுதல் செய்த பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்திய பொள்ளாச்சி ஜெயராமன்- அதிருப்தியில் அரசு அதிகாரிகள்

கோவை- பொள்ளாச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலை ரூ.414 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறுகலாக இருந்த சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்த காரணத்தினால் இச்சாலையை அகலப்படுத்த வேண்டி  விடுத்தனர். அதன் விளைவாக பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரிவுபடுத்தப்படும் இச்சாலையால் விபத்துகள் பெருமளவில் குறையும் என்ற மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக தனியார் பேருந்துகள் சாகச பயணங்கள் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 

கடந்த வாரம் நீயா? நானா? என்று போட்டி போட்டுக்கொண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை ஓட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அந்த பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, அதிவேகமாக இயங்கியதாக 29 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், டி.எஸ்.பி. முத்துராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு அதிவேகமாக பேருந்துகளை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். 

தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் பறிமுதல் செய்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, சார் ஆட்சியரிடம் பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்திய பொள்ளாச்சி ஜெயராமன், பேருந்து உரிமையாளர்களுக்கு உறுதியும் அளித்தார்.  

அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற சொன்னதாக கருதிய அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்தனர். பேருந்துகளை விடுவிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...