அதிவேகமாக இயங்கியதாக அதிகாரிகள் பறிமுதல் செய்த பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்திய பொள்ளாச்சி ஜெயராமன்- அதிருப்தியில் அரசு அதிகாரிகள்

கோவை- பொள்ளாச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலை ரூ.414 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறுகலாக இருந்த சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்த காரணத்தினால் இச்சாலையை அகலப்படுத்த வேண்டி  விடுத்தனர். அதன் விளைவாக பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரிவுபடுத்தப்படும் இச்சாலையால் விபத்துகள் பெருமளவில் குறையும் என்ற மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக தனியார் பேருந்துகள் சாகச பயணங்கள் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 

கடந்த வாரம் நீயா? நானா? என்று போட்டி போட்டுக்கொண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை ஓட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அந்த பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, அதிவேகமாக இயங்கியதாக 29 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், டி.எஸ்.பி. முத்துராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு அதிவேகமாக பேருந்துகளை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். 

தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் பறிமுதல் செய்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, சார் ஆட்சியரிடம் பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்திய பொள்ளாச்சி ஜெயராமன், பேருந்து உரிமையாளர்களுக்கு உறுதியும் அளித்தார்.  

அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற சொன்னதாக கருதிய அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்தனர். பேருந்துகளை விடுவிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...