கோவையில் இரைப்பை உணவுக்குழாய் முதல் சர்வதேச மாநாடு மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம்

உணவுக்குழாய் மற்றும் இரைப்பை நோய்க்கான முதல் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம் வருகிற மே மாதம் 11-ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளது.

ஜெம் மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் இம்முகாமில் வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உணவுக்குழாய் இரைப்பையில் ஏற்படும் நோய்கள் குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் புற்றுநோய்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படவுள்ளது.

மேலும், உணவுக்குழாய் இரைப்பை நோய் சிகிச்சைக்காக ஐஎஸ்இஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மும்பையில் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்றவரும், ஜெம் மருத்துவமனை தலைமை மருத்துவருமான சி.பழனிவேலு ஒருமனதாக தலைவராக தேர்வு பெற்றார். டாடா மெமோரியல் கேன்சர் மருத்துவமனை மருத்துவர் பிரமேஷ் செயலாலராகவும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 மருத்துவர்கள் செயல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மருத்துவர் பழனிவேலு தலைமையில் மருத்துவர் பார்த்தசாரதி, ரமேஷ், பரத் ஆகியோர் இம்மருத்துவ மாநாட்டை நடத்துகின்றனர். இம்மாநாட்டில் கொரியாவைச் சேர்ந்த ஹயுங், டி.ஜே.கிம், ஜப்பானைச் சேர்ந்த கௌஸ்க் நருமியா, ஹர்ஸி ஒசுகி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வார்வல்டு, சீனாவைச் சேர்ந்த லி கௌஸின் குந்தான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து புகழ்பெற்ற பேராசிரியர்களும், 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பங்கேற்கின்றனர். மேலும், இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து இந்த மாநாட்டிற்கு இத்துறையைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சிறுதுளை லேப்பிராஸ்கோப் இன்றைய தினத்தில் சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும். ரோபோட்டிக்கில் இன்னும் துல்லியமாகவும், முழுமையாக புற்று கட்டியை அகற்றுவது சாத்தியம்.

வரும், 7ம் தேதி வயிறு சம்பந்தப்பட்ட இலவச மருத்துவ முகாம் கோவை ஜெம் மருத்துவமனையில் நடைபெறுகிறது. நெஞ்செரிச்சல், ஹெர்னிய வீக்கம், கேன்சர், கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்கள் இலவச அலோசனை பெறலாம். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 சதவிகித சலுகையும் புற்றுநோய் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அளிக்கவும் கோவை ஜெம் மருத்துவமனை அறக்கட்டளை, கோயம்புத்தூர் ரோட்டரி புறுநோய் உயிர்காக்கும் அறக்கட்டளை இணைந்து செயல்படுகிறது. இம்முகாமில் பங்கேற்க 04222325100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...