முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: கோவையில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

கோவையில் உக்கடம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடினர். உச்ச நீதிமன்றம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஜாமீனை வழங்கியது.



Coimbatore: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கோவையில் திமுக தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கோவையில் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் ஒன்றுகூடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள், பேருந்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.



இந்த கொண்டாட்டங்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை திமுகவினர் பெரும் வெற்றியாக கருதி இவ்வாறு கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...