கொடநாடா கொலை நாடா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

கோவையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியத்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 90 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியே தமிழகம் ஆகும். தமிழக மக்கள் ஆட்சியில் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் பாஜக ஆகும். 

மின்சாரத்திற்காக 3 ரூபாய் 33 காசுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறேன் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மின் வெட்டு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் மின்வெட்டே இங்கு இல்லை என வாதாடி வருகிறார். கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொடநாடா அல்லது கொலைநாடா என்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவும், திமுக-வும் ஆட்சிசெய்யும் தகுதியை இழந்துவிட்டன. இனி வரும் தேர்தல்களில் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" என பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...