நிர்பயா வழக்கில் நால்வருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நண்பருடன் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

பெண்ணியத்தின் குரல்வளையை நசுக்கும் விதமான இந்த கோர சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, மக்களின் மனதில் எழுச்சி தோன்றி பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. கொலை செய்யப்பட்ட மாணவியின் பெயருக்கு பதிலாக இந்த வழக்கிற்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பத்தை அரங்கேற்றிய அந்த 6 பேருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இக்கொலை தொடர்பாக 18 வயதான சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்த 5 நபர்களின் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கடந்த 2014 டெல்லி உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது. 

இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியிட்டனர். அதில், நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒன்று என்றும், குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களும், சாட்சியங்களும் பலமாக உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என்று கூறி, 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...