'கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை' - புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பேராசிரியர் சுப்பராயலு கருத்து

கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த தேசியக் கருத்தரங்கில், கீழடி அகழாய்வு குறித்து புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சுப்பராயலு முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.



Coimbatore: கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் இன்று துவங்கியது. நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம், வானவராயர் பவுண்டேசன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கருத்தரங்கின் நோக்கம், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அண்மைக்கால அகழாய்வுகளில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளைப் பகிர்ந்து கொள்வதும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கொங்கல்நகர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்விற்கு களப்பயணம் செய்வதும் ஆகும்.



கருத்தரங்கின் முதல் நாளில், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு, குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன், தொல்லியல் துறை ஆளுமைகள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன் பேசுகையில், "அகழாய்வுகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகள் வருவதற்கு தாமதம் ஏற்படுகிற இந்த சூழலில், அந்தத் துறை சார்ந்த ஆளுமைகளை பேசவைத்து செய்திகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலேயே, இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பதாக" தெரிவித்தார்.



புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு தனது உரையில், கீழடி அகழாய்வு குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், "கீழடியில் வீடுகள் இருந்ததற்கான அமைப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு தொழில் சார்ந்த இடமாக இருந்திருக்கலாம். தொல்பொருள்களைப் பொறுத்தவரை, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட்களோடு ஒப்பிடுகையில் கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கீழடிக்கு என்ன சிறப்பு என்று புரியவில்லை" என்று தெரிவித்தார்.



கருத்தரங்கின் தொடர்ச்சியாக, பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற்றன. இதில் தொல்லியல் துறை சார்ந்த ஆளுமைகள் உரை நிகழ்த்தினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...