திருப்பூரில் முதல்முறையாக தீபாவளி திருவிழா ஷாப்பிங் எக்ஸ்போ துவக்கம்

திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் பழங்கரை பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க வளாக கட்டிடமான ஐகேஎஃப் (IKF) இல் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆடை கண்காட்சியில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தங்களுக்கான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.



திருப்பூரில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களது ஆடைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். பின்னலாடையில் என்றும் சிறப்பம்சங்களுடன் திகழும் திருப்பூரில் ஒரே இடத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடைகளை இந்த கண்காட்சியில் வாங்க முடிகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆடைகள் இந்த கண்காட்சியில் கிடைப்பதும், அதுவும் குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். அனைத்து வகையான ஆடைகளும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



முதல் முறையாக திருப்பூரில் நடைபெறும் இந்த நேரடி விற்பனை எக்ஸ்போவில் 50,000 பேருக்கு மேல் வருகை தரவும், சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என்றும் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அனைத்து விதமான ஆடைகளும் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...