மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு: ஒரு நாள் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் கனமழையால் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ஒரு நாள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் சேதம் அடைந்ததால், இன்று ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி குன்னூர் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் மலை ரயில் பாதையில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



கடந்த இரண்டு நாட்களாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு கல்லார் மற்றும் குன்னூர் இடையே உள்ள வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள மலை ரயில் பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் பாதை சேதமடைந்துள்ளது.

கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று காலை தண்டவாளங்களை சரிபார்க்க சென்ற ரயில்வே ஊழியர்கள் ரோந்து பணியின் போது மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று குன்னூருக்கு காலை புறப்பட்டு சென்ற மலைரயில் கல்லார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இந்த தகவல் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சேதமடைந்த பெல் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிக்கு ரயில்வே ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...