பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து - பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், இதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் பயணமாக வருகின்ற 10ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர இருந்தார். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 11 ம் தேதி கோவையில் நடைபெறும் அமித்ஷா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கோவை வந்தார்.

இந்நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கிளம்பும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராசன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமித்ஷா வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் அமித்ஷாவின் தமிழக வருகை தேதி அறிவிக்கப்படுமெனவும், அப்போது பிரம்மாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். 

மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பாதிக்கப்படும் ஏழை நோயாளிகள் பற்றி கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக அமைச்சர் காமராஜ் மீது வழக்குபதிவு செய்ய உச்சநீதிமன்றம்  உத்தவிட்டும், வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீதியை யாரும் மீறக்கூடாது எனவும், நீதிக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீதியின் படி தமிழகத்தில் அனைத்தும் நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதனை தமிழக முதலமைச்சர்கவனிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...