கோவையில் ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரண்டு மர்ம நபர்கள் நூதன முறையில் பணம் திருடியுள்ளனர். இதே போன்று 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குனியமுத்தூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் உண்மையில் பணம் வரவில்லை. 24 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள், அவ்வாறு நடக்காததால் வங்கி கிளையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளியேறும் பகுதியில் 'டேப்' ஒட்டி விட்டு வெளியேறியது தெரிய வந்தது. பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்று தோல்வியுற்று வெளியேறிய பிறகு, அதே நபர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து ரூ.30,000 திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.

இதையடுத்து வங்கி கிளை மேலாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேக நபர்கள் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.

முதல்கட்ட விசாரணையில், இதே முறையில் கோவை பெரியகடை வீதி ஏடிஎம் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஏடிஎம் உள்ளிட்ட மொத்தம் 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது.

தற்போது தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டறிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...