கோவை தெலுங்குபாளையத்தில் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்தவர் கைது

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் நேற்று (செப்டம்பர் 29) நடந்தது.


கோவை: கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் தெருவைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (செப்டம்பர் 29) அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்த மனோஜை, அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தி முனையில் மிரட்டினார். பின்னர் மனோஜிடம் இருந்த ரூ.1,400 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து மனோஜ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போன் மற்றும் பணத்தை பறித்தவர் தெலுங்குபாளையம் சிவசக்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித் குரு (39) என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...