ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், பேராசிரியர் காமராஜ் மகள்கள் விவகாரம் தொடர்பாக ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.



Coimbatore: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பேராசிரியர் காமராஜ் மகள்கள் தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில் நடைபெற்றது.

பேராசிரியர் காமராஜ் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாகவும், அவர்களை சந்திக்க ஈஷா அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அவரது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் துறவியாக மாற்றப்படுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காமராஜர் தனது மனுவில், ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும், ஒரு மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஈஷா மையத்துக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களை மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், காமராஜரின் மூத்த மகள் கீதா, தனது தந்தைக்கு மொபைல் போனின் வாயிலாக தொடர்பு கொண்டு, ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய சகோதரி லதா உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷா யோகா மையத்தில் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...