தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் மூன்று வெண்கலப் பதக்கங்கள் வெற்றி

பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார். 11 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு லிபரல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத், பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், பிரணவ் அருண்பிரசாத் இந்திய அணி சார்பில் ஜூனியர் A பிரிவில் (17-19 வயது) பங்கேற்றார்.

இப்போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீனா, ஹாங்காங், மங்கோலியா, சிங்கப்பூர், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பிரணவ் அருண்பிரசாத் தனது வயது பிரிவில் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே மூன்றாம் இடம் பிடித்து மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.



குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் பிரணவ் அருண்பிரசாத் ஆவார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரணவ் அருண்பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், போட்டிகளில் பங்கேற்க உண்டான தொகையான 1,95,000 ரூபாயை தமிழக அரசின் சார்பில் நேரில் வழங்கி வாழ்த்தினார்.



போட்டிகளில் வெற்றி பெற்ற பிரணவ் அருண்பிரசாத், அக்டோபர் 1 ஆம் தேதி காலை 8:00 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பி வருகிறார். இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பிரணவ் அருண்பிரசாத்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...