மேட்டுப்பாளையம் அருகே: பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்ட உள்ளூர் மக்கள்

மேட்டுப்பாளையம் அருகே வச்சினம்பாளையத்தில் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற குடும்பம் திடீர் வெள்ளத்தில் சிக்கியது. உள்ளூர் மக்கள் கயிறு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்டனர்.



Coimbatore: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வச்சினம்பாளையத்தில் பவானி ஆற்றில் துணி துவைக்கச் சென்ற குடும்பத்தினர் திடீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில், உள்ளூர் மக்கள் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த ராம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் சென்றனர்.

அங்கு அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டும், துணி துவைத்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர். அப்போது திடீரென பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் உதவி கேட்டு கத்தி கூச்சலிட்டனர்.

இதைக் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அருகில் இருந்த தோட்டங்களில் இருந்து கயிறுகளை எடுத்து வந்து, அவற்றைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட 5 பேரிடமும் அறிவுரை கூறிய பொதுமக்கள், இந்த இடத்தில் குளிக்கக் கூடாது என்று பேரூராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், அதை மீறி குளித்ததால் தான் இந்த அபாயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படலाம் என்பதால் தான் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...