மேட்டுப்பாளையத்தில் மஹாளய அமாவாசைக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்

மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசைக்கு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வருகை தருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசை மற்றும் ஆன்மா சாந்தி அடையும் என நம்பப்படுவதால் அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை புரிவார்கள் என்பதால் அனைத்து இந்து சமுதாய நந்தவன நிர்வாகம் சார்பில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

ஒரே நேரத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30,000 முதல் 40,000 பொதுமக்கள் வரை தர்ப்பணம் கொடுக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு வரிசைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் பவானி ஆற்றில் புனித நீராடுவார்கள் என்பதாலும் பிண்டத்தை கரைக்க ஆற்றங்கரைக்கு செல்வது வழக்கமாக இருந்து வரக்கூடிய நிலையில் அங்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்தும் அங்கேயும் தடுப்புகள் அனைத்தும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகாலை முதல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் சாலை மற்றும் ஊட்டி சாலை போன்ற பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



வருகின்ற பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் தலைவர் என்.எஸ்.வி. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....