ஆனைக்கட்டி பகுதியில் மண் எடுப்பு குறித்த ஆய்வு: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ஆனைக்கட்டி பகுதியில் மண் எடுப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு பற்றி விளக்கமளித்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி 19 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற உலக முதியோர்கள் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ஆனைக்கட்டி பகுதியில் நடத்தப்பட்ட மண் எடுப்பு குறித்த ஆய்வு பற்றி விளக்கமளித்தார்.

ஆட்சியர் கூறுகையில், "உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின் படி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து கோவையில் இரு தினங்களாக தொண்டாமுத்தூர், ஆனைக்கட்டி பகுதிகளில் மண் எடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மொத்தம் 19 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்பகுதியில் மண்ணின் தரம் குறித்தும், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும்," என்றார்.

ஆனைக்கட்டி பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, அங்கு செயல்படும் தனியார் ரிசார்ட் சம்பந்தமாக பொதுமக்கள் முறையிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், "அந்த ரிசார்ட் மீது ஒருசில பிரச்சினைகள் குறித்து மக்கள் சிலர் குறிப்பிட்டனர். குறிப்பாக வழித்தடங்கள் குறித்து தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன் முடிவெடுப்பார்," என்றார். மேலும், "ரிசார்ட் பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்," என்று உறுதியளித்தார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...