பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழா: கோவையில் ஊழியர்கள் பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பேரணி நடத்தினர். பலூன்கள், பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சேவைகளை விளம்பரப்படுத்தினர்.



கோவை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

அக்டோபர் 1ஆம் தேதி பி.எஸ்.என்.எல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.



பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் கைகளில் பலூன்களையும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை விளக்கும் பதாகைகளையும் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணி மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தனர்.



இந்த நிகழ்வில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் விதமாக நடத்தப்பட்ட இந்த பேரணி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியையும், மக்களுக்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...