காந்தி ஜெயந்தி: கோவை கதர் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் மரியாதை - தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோவை கதர் அங்காடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மரியாதை செலுத்தினார். தீபாவளி சிறப்பு விற்பனையையும் தொடங்கி வைத்தார். கதர் பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள கதர் அங்காடி நிலையத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு, காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையையும் அவரே பெற்றுக் கொண்டார். காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கதர் ரகங்களுக்கு 30 சதவீதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிராமப்புற ஏழைப் பெண்களின் மேம்பாட்டு நலனை கருதியும், சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாநில அரசும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் இந்த தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளன. பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கதர் ரகங்களை அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...